தமிழகம் வந்த மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள்.. 18+ அனைவருக்கும் மே 1 முதல் இலவச தடுப்பூசி
சென்னை: தமிழகத்தில் வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், இன்று மேலும் 3 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு தொகுப்பில் இருந்து மேலும் மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று தமிழகத்திற்கு வந்தன. அவை தேனாம்பேட்டையிலுள்ள மருந்து சேமிப்பு கிடங்கிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டது. மத்திய அரசு இதுவரை 69.85 லட்சம் தடுப்பூசி டோஸ்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
இதுதவிர மாநில அரசுகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு 1.5 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்யத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் வரும் மே 1ஆம் தேதி முதல் 18+ அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications