சசிகலா விசிட்- சேலத்தில் பரபர- எம்ஜிஆர், ஜெ. சிலைகளை நெருங்க விடாமல் இபிஎஸ் கோஷ்டி போலீசில் புகார்
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளர் என தம்மை தாமே அறிவித்துக் கொள்ளும் சசிகலா இன்று சேலம் பகுதிகளில் சுற்றுப் பயணம் செல்கிறார். சசிகலாவின் சேலம் பயணத்துக்கு எதிராக இபிஎஸ் கோஷ்டியினர் போலீசில் புகாரும் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் சசிகலா கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி, இபிஎஸ் கோஷ்டி என பல கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன. ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் மாறி மாறி நீதிமன்ற படிகளேறிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம், ஓபிஎஸ் கோஷ்டி சசிகலா கோஷ்டியுடன் கை கோர்த்துக் கொண்டிருக்கிறது.

புரட்சி தாயின் புரட்சி பயணம்
இந்த நிலையில் சசிகலா, அதிமுக தொண்டர்களை சந்திக்கிறேன் என தமிழகம் முழுவதும் புரட்சித் தாயின் புரட்சிப் பயணம் என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சேலம் பகுதிகளில் இந்த பயணத்தை சசிகலா நேற்று மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவை முன்னிட்டு தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டதால் இந்த பயணத்தை சசிகலா ஒத்திவைத்திருந்தார்.

சேலத்தில் இன்று..
இன்று தஞ்சாவூரில் இருந்து தமது பயணத்தை சசிகலா மீண்டும் தொடங்குகிறார். தஞ்சாவூர், திருவையாறு, விரகனூர் என தொடங்கும் இப்பயணம் சேலம் ஆத்தூர், வாழப்பாடி, சேலம் நான்குரோடு, சூரங்கமலம் வரை செல்கிறது. நாளை மாலை ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் இப்பயணம் முடிவடைகிறது.

எடப்பாடி கோஷ்டி
சேலம் மாவட்டம், அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம். இந்த மாவட்டத்தில் சசிகலாவின் பயணம் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக இபிஎஸ் கோஷ்டி முழுவீச்சில் தீவிரம் காட்டி வருகிறது. இபிஎஸ்-ம் சேலம் மாவட்டத்திலேயே முகாமிட்டு சசிகலாவின் பயணத்தை கவனித்து வருகிறார்.

போலீசில் புகார்
இந்நிலையில் சேலம் வருகை தரும் சசிகலா, எம்ஜிஆர்-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்க தடை விதிக்க வேண்டும் என இபிஎஸ் கோஷ்டி போலீசுக்கு போயிருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏக்களான ஆத்தூர் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி மற்றும் அதிமுக நிர்வாகிகள் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏக்களின் புகாரின் அடிப்படையில் போலீசார் சசிகலாவுக்கு தடை விதிப்பார்களா? இந்த தடையை மீறி சசிகலா, எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பாரா? என்கிற பரபரப்பு சேலத்தில் நிலவுகிறது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications