E(O)PS means End of Paneer Selvam.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐடி விங்!
சென்னை: மரியாதையாக வழி அனுப்பி வைக்கிறோம், நீங்களாக சென்றுவிடுங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுகவின் ஐடி பிரிவினர் களமிறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக கூடியது. இதுவரை இல்லாத அளவுக்கு கலாட்டாக்களும் கேலி கூத்துகளும், சங்கடங்களும் காணப்பட்டன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை, அதுவும் எடப்பாடி பழனிச்சாமிதான் தேவை என தொண்டர்கள் முழக்கமிடுகிறார்கள். ஓபிஎஸ்ஸை காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் அதிக ஆதரவு உள்ளது.

23 தீர்மானங்கள்
பொதுக் குழுவில் தான் கையெழுத்திட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முறையிட்டதால் அதன்படியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் ஒற்றைத் தலைமை குறித்த எந்த தீர்மானங்களும் நிறைவேற்றவில்லை.

பொதுக் குழு நிராகரிப்பு
இதனால் 23 தீர்மானங்களை பொதுக் குழு நிராகரிக்கிறது என சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இருதினங்களாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுகவின் ஐடி விங் களமிறங்கியுள்ளது.

கோவை சத்யன்
இதுகுறித்து ஐடி விங்கை சேர்ந்த கோவை சத்யன் கூறுகையில் கடந்த 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியா ஓ பன்னீர் செல்வமா என போட்டியிருந்தது. அது போல் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்தனர்.

ராஜ சத்யன் ட்வீட்
2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் முடிவு கட்டிவிட்டார், எனவே ஓபிஎஸ்ஸை மரியாதையாக வழி அனுப்பி வைக்கிறோம். சென்றுவிடுங்கள் என ட்வீட் போட்டுள்ளார. அதுபோல் அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேதிகள் மாறலாம், தலைமை மாறாது. தலைமையை தேர்ந்தெடுப்பது, தொண்டர்களும்,மக்கள் மன்றமும் மட்டுமே...
#கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார் என தெரிவித்துள்ளார்.

பழனிச்சாமிக்கு ஆதரவாக
அது போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள ட்விட்டர், முகநூல் பக்கங்களில் அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இது வரை யாரும் கண்டதில்லை. முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ் இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications