எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்.. இனி அதிமுக வேகமாக நடைபோடும்.. பூரிக்கும் ராஜன் செல்லப்பா
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியின் தன்னம்பிக்கைக்கும், முயற்சிக்கும் கிடைத்த தீர்ப்பு மட்டுமல்ல, இது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது . உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இந்த தீர்ப்பு அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீர்ப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேசுகையில், ஒற்றைத் தலைமை என்ற நல்ல முடிவுக்காக குரல் கொடுத்தோம். இன்று கிடைத்துள்ள தீர்ப்பு, மக்களின் கருத்தாக, தொண்டர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
இதன்மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேகமாக நடக்கும். எடப்பாடி பழனிசாமியின் தன்னம்பிக்கைக்கும், முயற்சிக்கும் கிடைத்த தீர்ப்பு மட்டுமல்ல, இது தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.
'அவங்க வந்தாலும்' வருவாங்க.. அலர்ட்டான சென்னை காவல்துறை! அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பரபரப்பு.!