அவைத் தலைவரின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பாதீர்- அதிமுக ட்வீட்!
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கழகத் தலைமை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வரும் மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ்ஸுக்கு முதலில் வந்து ஆதரவு தெரிவித்தவர்.

இவருக்கு சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் நேற்று இரவு பரவின. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுக விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என தெரிவித்துள்ளது.
எனவே மதுசூதனனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்பதை யாரும் நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications