ச்சே.. எதிர்பார்த்ததை விட தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி ரொம்ப வீக்கா இருக்கேப்பா.. காங். எம்எல்ஏ கேலி!
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இமாலய வெற்றியை பெறும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
சென்னை: அதிமுகவிற்கு சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. நான்காக சிதறியிருக்கிறார்கள், எதிர்பார்த்ததை விட மோசமான நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன என்று செல்வபெருந்தகை கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேமுதிக, அமமுக வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளன. பாஜக வரும் 31 ஆம் தேதி நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

செல்வ பெருந்தகை பேட்டி
பாஜக போட்டியிடாது என்பதை சூசகமாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வேட்பாளரை முதல் ஆளாக அறிவித்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெபாசிட் வாங்கக்கூட வாய்ப்பு இல்லை
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வீடு வீடாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம். எதிரிகளே இல்லை என்று நாங்கள் ஆணவத்தில் எப்பொழுதுமே பேசமாட்டோம். ஆனால் ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு நபரும் அமைச்சர் முத்துசாமிக்கு நல்ல வரவேற்பு அளிக்கின்றனர். சென்று வா வென்று வா ஆசிர்வதித்து அனுப்புகின்றனர். எனவே இமாலய வெற்றியை திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமான நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. டெபாசிட் வாங்கக்கூட வாய்ப்பு இல்லை என்றுதான் இப்பொழுதே பேசப்படுகிறது.

மரண அடியை சந்திக்க போகிறார்கள்
அதிமுகவிற்கு சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. நான்காக சிதறியிருக்கிறார்கள். யார் பாஜகவை தூக்கிப் பிடிப்பது.. ஆர்.எஸ் எஸ். சித்ததாந்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்று பாஜக அலுவலகத்தில் அவர்கள் காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதுதான் அதிமுகவின் வேலையாக உள்ளது. பெரிய இயக்கமான அதிமுக சிதறடிக்கப்பட்டு அந்த இயக்கத்தை அடிமைக் களமாக மாற்றி வைத்து இருக்கிறார்கள். எனவே மிகப்பெரிய பலத்த மரண அடியை சந்திக்க போகிறார்கள்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications