’ஆப்ரேசன் 10’ ரஜினி சொன்னதையே திரும்ப சொன்ன அமித் ஷா! காலியாகிறதா அதிமுக கூடாரம்? கலகலத்த கமலாலயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்திக்காதது, இன்று சென்னை வந்த அமித் ஷா ரஜினி கூறியதையே திரும்ப கூறியது உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக 'மேல் மட்ட' தலைவர்கள் சற்று பதட்டத்திலேயே இருக்கின்றனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் மாபெரும் மக்கள் இயக்கமாக இருக்கும் அதிமுகவின் கடந்த கால சில நிகழ்வுகளை அந்தக் கட்சியினரே ரசிக்கவிவில்லை என்று தான் கூற வேண்டும் .ஈபிஎஸ் ஓபிஎஸ் இடையேயான அதிகார மோதல் தான் இதற்கு காரணம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஆவேசமாக பேசியது இந்திய அரசியலில் பேசுபொருளானது. சொன்னது போல அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக பெரு வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அதிமுக மோதல்

அதிமுக மோதல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டிற்குள் பாஜக வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். அணிகள் இணைந்தது, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றது தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது என எல்லா விஷயங்களிலும் பாஜகவின் தலையீடு இருக்கிறது என்பதை அதிமுகவினரே ஒப்புக்கொள்கின்றனர். தற்போதைய அதிகார மோதலில் பாஜக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் இருவரையுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவே அந்த கட்சி தலைமை விரும்புகிறது.

அமித் ஷா

அமித் ஷா

அதன் வெளிப்பாடாகத்தான் பிரதமர் தற்போதைய தமிழக வருகையின் போது ஓபிஎஸ்ஸையும் எடப்பாடி தனித்தனியாக சந்திக்க மறுத்தது எனக் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தமிழகம் வந்துள்ள அமித்ஷாவும் அதிமுகவை குறி வைத்து சில விஷயங்களை பாஜக நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். கமலாலயத்தில் அமித் ஷா பேசியுள்ள விஷயங்கள் குறித்த இந்த தகவல் அதிமுக தரப்புக்கு கிடைத்ததில் இருந்தே மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்களாம். அப்படி என்ன பேசினார் அமித்ஷா?

அரசியல் வெற்றிடம்

அரசியல் வெற்றிடம்

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களிடம் பேசிய அமித்ஷா,"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி கூறியதையே மீண்டும் பதிவு செய்திருக்கிறார். அதாவது கருணாநிதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

அதிமுக தலைகள் பதற்றம்

அதிமுக தலைகள் பதற்றம்

மேலும் தமிழ்நாட்டில் பத்து மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதிமுக கூட்டணியை விட்டால் பாஜகவுக்கு வேறு வழியில்லை என்றாலும், தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதா எனவும் அறிக்கை அளிக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பாக அதிமுக தலைமையை இணைக்க முயற்சி எடுக்குமாறு கூறியுள்ளார். இல்லையே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட தயங்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அதிமுக அதற்குரிய பலனை அனுபவிக்கும் என கூறியதாகவும் இந்த தகவல்கள் தான் அவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+