16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்!
சென்னை: சரியாக படிக்கவில்லை என பள்ளி ஆசிரியர் பெற்றோரிடம் புகார் அளித்ததால் 11-ம் வகுப்பு மாணவி 16-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி, எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன்(38). மளிகை கடைக்காரர். இவரது மகள் வைஜெயந்தி (16). பிரபல வேலம்மாள் பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

ஆசிரியர் புகார்
மாணவி சரியாக படிப்பதில்லை என்றும் வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தந்தை பாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, '' உங்கள் மகள் வைஜெயந்தி சரியாகப் படிக்கவில்லை, வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை'' என்று நேற்று காலை அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்துள்ளார்.

தந்தை மீது பயம்
இது பள்ளியில் இருக்கும் மாணவி வைஜெயந்திக்கு தெரியவந்தது. வீட்டிற்கு சென்றால் ஆசிரியர் புகார் கொடுத்தது தொடர்பாக தந்தை திட்டுவார் என்ற பயத்தில் அவர் இருந்துள்ளார். இதனால் மாணவி வைஜெயந்தி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

தற்கொலை
அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற மாணவி வைஜெயந்தி, லிப்ட் மூலம் 16 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறி, மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்ததும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் வீட்டில் கூறியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே நடந்து சென்று லிப்டில் ஏறி 16-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications