அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை.. முதல்வர் ஸ்டாலின் ஏற்பாரா?
சென்னை: கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்புயுமான அன்புமணி ராமதாஸ், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள். குறிப்பாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள்.
கொரானா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு 25லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கும் 25லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

காவலர்கள் குடும்பம்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

ஊரடங்கு நடைமுறை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்துபவர்கள் காவலர்கள் தான். தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்வதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர்

பாதுகாப்பு பணி
தமிழ்நாட்டில் 54காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்பாரா ஸ்டாலின்?
ஏற்கனவே கொரானா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள வீரர்களான மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காவலர்களின் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸி கோரிக்யை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications