Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பார்வையாளராக நின்றபோது.. ஆம்புலன்ஸ் கொடுத்த முஸ்லீம் முன்னேற்றக் கழகம்: அருணா ஜெகதீசன் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மனிதாபிமான மிக்க ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கது என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்ற நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவ முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அருணா ஜெகதீசன்

அருணா ஜெகதீசன்

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதுமட்டுமல்லால் குண்டடி பட்டும், காவல்துறையினரின் தடியடி பட்டும் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, துப்பாக்கிச்சூடு நிகழ்வு பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

 தமுமுக சேவை

தமுமுக சேவை

இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முறைப்படி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம் மக்களுக்கு தெரியாத பல புதுமையான தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையை மனிதாபிமானம் மிக்க செயல் எனக் கூறி பாராட்டியுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

 உதவ வரவில்லை

உதவ வரவில்லை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பக்கம் இருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவி புரிய முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றார்கள் எனவும் அருணா ஜெகதீசன் ஆணையம் ஆனித்தரமாக தெரிவித்துள்ளது.

மமகவின் அங்கம்

மமகவின் அங்கம்

மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது துணிந்து நின்று மனிதாபிமான மிக்க செயலாற்றியதன் மூலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+