அரசு பார்வையாளராக நின்றபோது.. ஆம்புலன்ஸ் கொடுத்த முஸ்லீம் முன்னேற்றக் கழகம்: அருணா ஜெகதீசன் பாராட்டு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மனிதாபிமான மிக்க ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கது என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்ற நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவ முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருணா ஜெகதீசன்
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதுமட்டுமல்லால் குண்டடி பட்டும், காவல்துறையினரின் தடியடி பட்டும் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, துப்பாக்கிச்சூடு நிகழ்வு பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமுமுக சேவை
இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முறைப்படி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம் மக்களுக்கு தெரியாத பல புதுமையான தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையை மனிதாபிமானம் மிக்க செயல் எனக் கூறி பாராட்டியுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

உதவ வரவில்லை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பக்கம் இருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவி புரிய முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றார்கள் எனவும் அருணா ஜெகதீசன் ஆணையம் ஆனித்தரமாக தெரிவித்துள்ளது.

மமகவின் அங்கம்
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது துணிந்து நின்று மனிதாபிமான மிக்க செயலாற்றியதன் மூலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications