அரசு பார்வையாளராக நின்றபோது.. ஆம்புலன்ஸ் கொடுத்த முஸ்லீம் முன்னேற்றக் கழகம்: அருணா ஜெகதீசன் பாராட்டு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மனிதாபிமான மிக்க ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கது என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்ற நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவ முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருணா ஜெகதீசன்
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதுமட்டுமல்லால் குண்டடி பட்டும், காவல்துறையினரின் தடியடி பட்டும் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, துப்பாக்கிச்சூடு நிகழ்வு பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமுமுக சேவை
இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முறைப்படி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம் மக்களுக்கு தெரியாத பல புதுமையான தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையை மனிதாபிமானம் மிக்க செயல் எனக் கூறி பாராட்டியுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

உதவ வரவில்லை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பக்கம் இருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவி புரிய முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றார்கள் எனவும் அருணா ஜெகதீசன் ஆணையம் ஆனித்தரமாக தெரிவித்துள்ளது.

மமகவின் அங்கம்
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது துணிந்து நின்று மனிதாபிமான மிக்க செயலாற்றியதன் மூலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications