கரூர் குரூரம்! தவெக நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்கவில்லை! ஆடிட்டர் குருமூர்த்தி மறுப்பு
சென்னை: கரூர் சம்பவத்தால் தவெக நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த முக்கிய புள்ளியான ஆடிட்டர் குருமூர்த்தியை விஜய்யும், தவெக நிர்வாகிகளும் சந்தித்ததாக தகவல்கள் கிடைத்த நிலையில் அதை ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தால் தவெக நிர்வாகிகள் மீது பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதிலும் விஜய், கரூரிலேயே இருக்காமல் அவசர அவசரமாக சென்னை வந்ததும் பேசுபொருளானது.

மேலும் கரூர் கூட்டம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் போலீஸார் கூறியும் பல்வேறு விதிகளை அவர்கள் மீறியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் மூவர் மீதும் ஜாமீனில் வெளியே வராதபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் தலைமறைவாக இருக்கும் மூவரையும் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கரூர் சம்பவம் நடந்த போது இறந்த மக்களின் உறவுகளை நேரில் கூட சந்திக்காமல், குறைந்தபட்சம் கரூரிலேயே மக்களோடு மக்களாக இருக்காமல் விஜய் இரவோடு இரவாக சென்னைக்கு வந்துவிட்டார். நீலாங்கரை வீட்டில் இருந்த விஜய், கடந்த இரு தினங்களாக யாரையும் சந்திக்கவில்லை.
எந்த சேனலை திறந்தாலும் எந்த செய்தித்தாளை பிரித்தாலும் கரூர் செய்திதான்! இதனால் தவெகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுவிட்டது. அதிலும் தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் தனது பிரச்சாரங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு என மூச்சுபிடித்துக் கொண்டு பேசிய நிலையில் அவருடைய கூட்டத்திலேயே பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பு இல்லாமல் இறந்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அறிக்கை கேட்டிருந்தனர். இந்த நிலையில்தான் இந்த நெருக்கடியை சமாளிக்க தமிழக பாஜகவின் முக்கிய புள்ளியாக இருந்து வரும் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்குமாறு சிலர் விஜய் தரப்புக்கு ஐடியா கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆடிட்டர் குருமூர்த்தியை நேரில் சந்தித்த தவெக நிர்வாகிகள் நிலைமையை எடுத்துச் சொன்னபோது அதற்கு அவர் உதவுவதாக உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. அதே வேளை இன்று பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்ற விஜய்யை ஆடிட்டர் குருமூர்த்தியே நேரில் போய் சந்திக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த கரூர் விவகாரத்தில் டெல்லி பாஜக தலைமை தலையிடுவதை அறிந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினிடமும் விஜய்யிடமும் பேசியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியோ, தவெக பிரதிநிதிகள் என்னை சந்திக்கவில்லை என மறுத்துள்ளார். அது போல் விஜய்யையும் தான் சந்தித்ததாக சொல்லப்படுவதும் உண்மையில்லை என ஆடிட்டர் குருமூர்த்தி மறுத்துள்ளார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க











Click it and Unblock the Notifications