'பீகாரின் சமூகநீதி பார்வைக்கு காரணம் தமிழகம்..' சென்னையில் முழங்கிய தேஜஸ்வி யாதவ்
சென்னை: சமூகநீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம் என பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை "உங்களில் ஒருவன்" நூல் வெளியாட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
"உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

தேஜஸ்வி யாதவ்
இவ்விழாவில் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ''தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார். தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றோரால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூகநீதி
பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்துக் கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். தலைவர்களின் சுயசரிதையை பதிவு செய்வது, வரலாற்றில் முக்கியமானது. இந்த புத்தகம் சமூகம் குறித்து பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால்நிறைந்தது.

சுயசரிதை
பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்துக் கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். தலைவர்களின் சுயசரிதையை பதிவு செய்வது, வரலாற்றில் முக்கியமானது. இந்த புத்தகம் சமூகம் குறித்து பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால்நிறைந்தது.

புரிந்துகொள்ள வேண்டும்
சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர, புத்திசாலித்தனம் மட்டும் போதாது, மக்களை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் இந்த சமூகத்தையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் புரிந்துகொண்டுள்ள ஒரு தலைவர். இந்த புத்தகம் ஸ்டாலினின் பரந்து பட்ட பார்வையையும், அரசியலையையும் விவரிக்கிறது. இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்'' என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications