நாட்டின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத் நினைவுத் தினம் இன்று! மனதை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து!
சென்னை: நாட்டின் முதல் முப்படைத் தளபதியாக திகழ்ந்த பிபின் ராவத்தின் நினைவுத் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தது நாட்டு மக்களின் மனதை உலுக்கும் வகையில் இருந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு செல்லும் போது பிபின் ராவத் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பிபின் ராவத்
இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாகவும், முன்னாள் ராணுவத் தளபதியாகவும் இருந்த பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உலுக்கும் வகையில் அமைந்திருந்தது. பிபின் ராவத்துடன் பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

மோசமான வானிலை
சூலுர் விமான படைத்தளத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர், குன்னூரை சென்றடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது நிகழ்வு குன்னூர் சுற்றுவட்டார மக்களை குலை நடுங்க வைத்தது. அந்தளவுக்கு பேரிடியான சத்தம் கேட்டது குறிப்பிடத்தக்கது. மோசமான வானிலையே இந்த விபத்துக்கு காரணமாக கூறப்பட்டது.

முதலாண்டு அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட உருவர் உயிரைக் கூட காப்பாற்ற முடியாமல்க் போனது துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பிபின் ராவத்தை நினைவு கூறும் வகையில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் இன்று முதலாமாண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்றத்தில் விளக்கம்
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications