சாவர்க்கர் அனுபவித்த கொடுமை! அவர் குறித்து வருங்கால சந்ததி படிக்க வேண்டும்..! பாஜக அண்ணாமலை அதிரடி.!
சென்னை : சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பாகுரில் 1883-ஆம் ஆண்டு மே 28-ல் பிறந்தார்.
ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, 12 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற இவர் 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இறந்தார்.

வீர சாவர்க்கர் பிறந்தநாள்
இந்நிலையில் இன்று வீர் சவார்க்கரின் 139வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாஜக உள்ளிட்டம் பல்வேறு கட்சிகளின் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் ஆங்கிலேயர்களுக்கு சாவார்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என்றும் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் வீர் சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து சாவர்க்கர் இருந்த சிறைச் சாலையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தினையும் அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சிறைக் கொடுமை
அதில், "வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். சமீபத்தில் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் அவர் தனிமையில் அடைக்கப்பட்டிருந்த அதே அறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம் தேசத்துக்காக சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது.
Recommended Video

சவார்க்கரின் வரலாறு
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து அதிகமாக படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை பாஜகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் அண்ணாமலையின் பதிவிலேயே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
கொந்தளித்த அண்ணாமலை.. வளர்த்த கிடா மார்பில் பாயுதே.. நீட் மறுதேர்வால் மத்திய அரசுக்கு வார்னிங் -
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்.. சென்னை, தாம்பரத்தில் 40 டி.எஸ்.பி-க்கள் டிரான்ஸ்பர்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
சென்னை மெரினாவிற்கு வரும் ‘ரோப் கார்'.. இனி வானில் பறந்து கொண்டே பீச்சை ரசிக்கலாம்.. குட்நியூஸ் -
ஜூலையில் அரசியல் களம் சூடுபிடிக்கும்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்?












Click it and Unblock the Notifications