சாவர்க்கர் அனுபவித்த கொடுமை! அவர் குறித்து வருங்கால சந்ததி படிக்க வேண்டும்..! பாஜக அண்ணாமலை அதிரடி.!
சென்னை : சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பாகுரில் 1883-ஆம் ஆண்டு மே 28-ல் பிறந்தார்.
ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, 12 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற இவர் 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இறந்தார்.

வீர சாவர்க்கர் பிறந்தநாள்
இந்நிலையில் இன்று வீர் சவார்க்கரின் 139வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாஜக உள்ளிட்டம் பல்வேறு கட்சிகளின் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் ஆங்கிலேயர்களுக்கு சாவார்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என்றும் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜக அண்ணாமலை
இந்நிலையில் வீர் சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து சாவர்க்கர் இருந்த சிறைச் சாலையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தினையும் அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சிறைக் கொடுமை
அதில், "வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். சமீபத்தில் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் அவர் தனிமையில் அடைக்கப்பட்டிருந்த அதே அறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம் தேசத்துக்காக சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது.
Recommended Video

சவார்க்கரின் வரலாறு
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து அதிகமாக படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை பாஜகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் அண்ணாமலையின் பதிவிலேயே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன் -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
மதுரை மெட்ரோ ரயிலுக்கு மறுப்பு ஏன்? திருப்பரங்குன்றம் முருகன் முன்.. ஆதாரத்துடன் அண்ணாமலை ஓபன் டாக் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்.. திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது.. அண்ணாமலை பரபர பேச்சு -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னை புறநகர் ரயில்கள் சேவை ரத்து.. ரயில்வே முக்கிய அறிவிப்பு -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம்












Click it and Unblock the Notifications