காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா?.. தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்
Recommended Video

சென்னை: சமூக ஆர்வலர் என்ற பெயரில் பியூஷ்மானுஸ் சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா?இதுதான் சமூக செயல்பாடா?சமூகஅமைதி சீர்குலைப்பா?சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே @arivalayam அனுமதிக்குமா? (1/2) https://t.co/Vo2DbZkv0F
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 29, 2019
அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து கலாட்டா காலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா? என வினவியுள்ளார். மேலும், இது சமூக செயல்பாடா? இல்லை சமூக அமைதி சீர்குலைப்பா ?எனவும் கேட்டுள்ளார். சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வீண் விளம்பரம் தேட முயற்சிக்கும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம் எனவும் தமிழிசை கூறியிருக்கிறார்.
அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும்,என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 29, 2019
அண்ணா அறிவாலயத்தில் ஒருவர் அத்துமீறி நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டால் அந்தக் கட்சி அதை அனுமதிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளதோடு, அன்று யாரோ, எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை தாக்கியது திமுக என்பது கடந்த கால வரலாறு என சாடியிருக்கிறார்.
பியூஷ்மானுஸ் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழிசை ட்வீட்டர் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications