அன்பான பயணிகளே! விமானத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய கேப்டன்! பயணிகளுக்கு தந்த இன்ப அதிர்ச்சி
சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற தனியார் விமானத்தில் கேப்டன் பிரிய விக்னேஷ் தமிழ் மொழியில் தமிழ் மாதங்கள் தொடர்பான கவிதை கூறி பயணிகளுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினார். இந்த கவிதை மூலம் ஒவ்வொரு தமிழ் மாதத்தையும் குறிப்பிட்டு அதன் பாரம்பரியத்தை அவர் நினைவுப்படுத்தி உள்ளார்.
விமானங்களில் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனத்தில் கேப்டனாக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரிய விக்னேஷ் விமான பயணத்தின்போது தமிழில் அறிவிப்பு செய்ய துவங்கி அதை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்.
இவர் பணியில் இருக்கும்போது எப்போதும் விமான பயணிகளுக்கு தமிழிலேயே அறிவிப்புகள் வழங்கி வருகிறார். வானில் பறந்தபடி இவரது அறிவிப்பை இன்ப தமிழில் கேட்க தனி ரசிகர்கள் கூட்டமும், பயணிகளும் உள்ளனர்.

விமானத்தில் தமிழ் புத்தாண்டு
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று கேப்டன் பிரிய விக்னேஷ் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பணியில் இருந்தார். தமிழ் புத்தாண்டையொட்டி அவர் கவிதை ஒன்றை பயணிகளிடம் வாசித்து காண்பித்தார். மேலும், அழகு தமிழில் புத்தாண்டு வாழ்த்தை மனதார கூறினார். அப்போது அவர் தனது பாட்டியின் நினைவுகளையும், நம் பாரம்பரியத்தோடு இணைத்து அவர் சொல்லி கொடுத்த தமிழ் மாதங்களையும் கவிதை நடையில் கூறினார்.

புராதன பாட்டி... தமிழ் மாத அறிமுகம்
இதுகுறித்து பிரிய விக்னேஷ் கூறியதாவது: ‛‛அன்பான பயணிகளே... அனைவருக்கும் வணக்கம்... இன்று ஒரு சிறப்பான நாள்... இன்று தமிழ் புத்தாண்டு... இந்த இனிமையான நாளில் நான் இயற்றிய தமிழ் கவிதையை உங்களுக்காக வாசித்து காட்ட விரும்புகிறேன்... தமிழும் அவளும் ஒரே. எங்கள் வீட்டில் புராதனமாய் எனது பாட்டி.. கால் இரண்டையும் நீட்டி... இப்படித்தான் அறிமுகப்படுத்தினாள் தமிழ் மாதங்களை எனக்கு...

மாதங்கள் வரிசையாக..
சித்திரையில் சிங்காரிச்சி வைகை ஆற்றில் வராரு அழகர் அய்யா... வைகாசியில் தான் அக்னி வெயில்... ஆனியில் தானே நீபிறந்த... ஆடியில் புதுஜோடியை பிரிச்சி தானே ஆகணும்... ஆவணியில் எங்கள் அப்பா, ஆத்தா கல்யாண நாள்... புரட்டாசி பெருமாளுக்கு... ஐப்பசியில் அடைமழை... கார்த்திகையில் மலை தீபம்... மார்கழியும் மச்சும் குளிரும்... தையில் தரையும் குளிரும்... மாசிபச்ச மாசியில குடும்பத்தோடு போயாகணும் குலசாமிய கும்பிடுறதுக்கு... பங்குனியில் உத்திர திருவிழா, உனக்கும் பெரிய பரீட்சை... பதனிசா படிச்சுக்கய்யா...
|
தமிழ் புத்தாண்டு வாழ்த்து
இப்படியாக அமுதும், தமிழும்போல அமையட்டுமே தமிழ் புத்தாண்டு... அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் என பிரிய விக்னேஷ் கூறி முடிக்க, சூப்பர் என பயணிகள் பாராட்டி எழுப்பிய கரவொலி விண்ணையும் பிளந்தது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் மக்கள் பிரிய விக்னேசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய பாஸ்கர் பாராட்டு
இந்த வீடியோவை பார்த்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய அதிமுக எம்எல்ஏவுமான விஜய பாஸ்கர், பிரிய விக்னேசை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ நேற்று சென்னையில் இருந்து தூத்துக்கடி சென்ற விமானத்தில் அதன் துணை விமானி பிரிய விக்னேஷ் தமிழ் புத்தாண்டு என்பதால் நம் மண்ணையும், மக்களையும் பிரதிபலிக்கும் வகையில் அழகான தமிழ் கவிதை ஒன்றை பகரிர்ந்திருக்கிறார். நெகிழ செய்கிறது. நண்பருக்கு என் வாழ்த்தும், அன்பும்'' என பாராட்டியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications