ரூ.18 கோடி ஹவாலா பண மோசடி.. இளைஞருக்கு 7 ஆண்டு சிறை.. சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: ரூ.18 கோடி ஹவாலா பண மோசடி வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அங்கப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள மின்னணு சாதனங்களை சரக்கு விமானங்களிலும், கப்பல்கள் மூலமாகவும் இறக்குமதி செய்துள்ளார்.

ரூ.18 கோடி ஹவாலா பணம்
போலி ஆவணங்கள் தயாரித்து கணக்கில் வராத ஹவாலா ரூ.18 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரத்தை வெளி நாடுகளுக்கு பணபரிமாற்றம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து லியாகத் அலியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் சி.பி.ஐ போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக சென்னை மண்டல மத்திய அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.அப்போது இந்தியன் வங்கியின் சென்னை ஆயிரம் விளக்கு கிளையில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 கோடியே 75 ஆயிரம் ரூபாயை முடக்கியது.

தீர்ப்பு கூறப்பட்டுள்ளது
இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி திருவேங்கட சீனிவாசன் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் லியாகத் அலிகான் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

7 ஆண்டு சிறை தண்டனை
இதனால் லியாகத் அலிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அவரது வங்கி கணக்கில் இருந்து முடக்கம் செய்யப்பட்ட தொகையை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் நாட்டின் நிதி நிர்வாக ஒழுங்கு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மோசமடைவதற்கு பண மோசடி குற்றங்கள் மிகவும் அபாயகரமான ஒன்றாக இருக்கின்ற நிலையில், அதை தடுப்பது நீதிமன்றத்தின் கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தீய எண்ணங்களுக்கு மூல காரணம்
பணம் தீயது அல்ல, தீய எண்ணங்களுக்கு மூல காரணம் என்று தேசத்தந்தை மகாத்மாகாந்தி கூறிய கருத்துப்படி, பணம் தீய எண்ணங்களுக்கு மூல காரணமாக அமையும்பட்சத்தில் அது சமுதாயத்தில் பொருளாதார குற்றத்தை அதிகரிக்க செய்து விடும் என்றும், அதை தடுப்பதற்கு சரியான நடவடிக்கை தேவை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications