இல்லத்தரசிகளுக்கு நிம்மதி.. எகிறியது பெரிய வெங்காயம் விலை.. சட்டென மத்திய அரசு எடுத்த சூப்பர் அதிரடி
சென்னை: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வெங்காய விலை குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. என்ன அது?
நம் நாட்டில், காலநிலை மாற்றத்தினால் காய்கறிகளின் விலை திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தக்காளி விலை பதற வைத்து.. இஞ்சி விலையோ கதற வைத்தது.. சின்ன வெங்காயத்தின் விலையோ அதிர வைத்தது..

கடந்த மாதத்தை காட்டிலும், இப்போதைக்கு தக்காளி விலை பரவாயில்லை.. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 40 முதல் 50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வெங்காய விலை உயர்ந்துவிட்டது..
ஆய்வறிக்கை: தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணத்தினால் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்துள்ளது.. இதனால், இல்லத்தரசிகள் விழிபிதுங்கி உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு, கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது.. அதில், நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில், வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
அதாவது, அக்டோபரில் காரிஃப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை, இந்த விலையேற்றம் நீடிக்கலாம், செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம்.
மழை நிலவரம்: இருப்பினும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. வரத்து - தேவை ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்க தொடங்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மழை நிலவரம் பொறுத்தே வெங்காயம் விளைச்சல் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.. வெங்காயத்தின் கொள்முதல் குறைந்துள்ளதால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பதற்காக விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையிலேயே, இருப்பிலுள்ள 3 லட்சம் டன் வெங்காயத்தை விடுவிக்க அரசு இவ்வாறு முடிவு செய்துள்ளது.

அதிரடி முடிவு: வெங்காய விலை அதிகமாகும் நேரங்களில் தள்ளுபடி விலையில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் பெரும் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு அதிரடி வெளியாகி உள்ளது.
வெங்காயத்தின் அளவு கடந்த 4 வருடங்களில் மும்மடங்காக உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications