Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமர் பாலம் வழக்கு: 8 வருஷமா பதில் மனு தாக்கல் செய்யாத பாஜக அரசு- உச்சநீதிமன்றத்தில் சு.சுவாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமர் பாலத்தை புராதான சின்னமாக அறிவிக்க கோரும் வழக்கில் 8 ஆண்டுகளாக மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டார்.

தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் ராமேஸ்வரம் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே மணல் திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த திட்டுகள் தொடர்ச்சியாக இருப்பதால் ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. புராணங்கள் அடிப்படையில் இது கடவுள் ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டிய இலங்கைக்கான பாலம் என்கிற கருத்தும் உள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமர் கட்டிய பாலம் என்கின்றனர் நம்பிக்கையாளர்கள்.

ராமர் பாலம் சர்ச்சை

ராமர் பாலம் சர்ச்சை

இந்த ராமர் பாலம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கி விட்டிருக்கிறது. இந்துத்துவவாதிகள் ராமர் பாலம், ராமர் பாலம் என பேசிய போதுதான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்படி ஒரு பாலம் கட்டுவதற்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார் என கேள்வி கேட்டார். இந்த கேள்வியால் இந்துத்துவவாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். நாடு முழுவதும் கருணாநிதியின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்தான் கருணாநிதியின் தலைக்கு இந்து தீவிரவாதிகள் விலைவைத்து அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தனர்.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம்

சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முனையும் போது எல்லாம் தமிழகத்தின் நலனுக்கு எதிரானவர்கள் இந்த ராமர் பாலம் விவகாரத்தை முன்வைப்பதும் வழக்கமாக இருந்தது. இலங்கையின் மன்னார் மற்றும் பாக்ஜலசந்தி நீரிணைப்பை இணைக்க 83 கி.மீ ஆழத்துக்கு கால்வாய் உருவாக்கி கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதுதான் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். அப்படி செய்யும் போது இலங்கையின் கொழும்பை சுற்றி அரபிக் கடலுக்கு கப்பல்கள் செல்லாமல் வங்க கடல் வழியாகவே சென்றுவிடலாம். இதன் மூலம் தமிழகம் பெருமளவுக்கும் வளமடையும்.

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

ஆனால் பல அமைப்புகள் சேதுக்கால்வாய் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராமர் பாலத்தை தேசிய புராதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சு.சுவாமி முறையீடு

சு.சுவாமி முறையீடு

சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்து வருகிறது. இந்த மனு மீது விசாரணை நடைபெறும் பலமுறை தகவல்கள் வெளியாகியும் விசாரிக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் சுப்பிரமணியன் சுவாமி ஆஜரானர். அப்போது, மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை என்று முறையிட்டார். இதையடுத்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சந்திரசூட் இது தொடர்பாக விளக்கம் கேட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+