சென்னை மெட்ரோ டிக்கெட்.. இனி லைனில் காத்திருக்க வேண்டாம்.. வாட்ஸ் அப்பில் வருகிறது.. ஹேப்பியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரம் லைனில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலமே டிக்கெட் எடுக்கும் சூப்பர் வசதியை விரைவில் அமல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதிலும் பீக் நேரங்களில் சென்னை சாலையில் பயணிப்பது என்றாலே பலருக்கும் தலைவலியே வந்து விடும். அந்த அளவுக்கு வாகன நெரிசல் இருக்கும்.

பயணிகள் கூட்டம்

பயணிகள் கூட்டம்

அதோடு குறிப்பிட்ட நேரத்திற்கு திட்டமிட்டு செல்ல முடியாது. இதனால், பலரும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கும் சென்றுவிடலாமா என நேரத்தை பார்த்துக்கொண்டு பரபரப்பாக செல்வதையே காண முடியும். கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து சென்னைவாசிகளை காப்பாற்றும் வகையில் மின்சார ரயில்கள் இயங்குகின்றன. அங்கும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

மெட்ரோ ரயில்கள்

மெட்ரோ ரயில்கள்

இதனால் பயணிகளின் வசதிக்காக சென்னையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மெட்ரே ரயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த இரு வழித்தடங்களிலும் நாள்தோறும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

 வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்

வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்

இதனால், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக பயணிகள் அடிக்கடி முன்வைக்கும் குற்றச்சட்டாக உள்ளது. இதனால், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் விரைவில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-

மிகவும் எளிதான நடைமுறை

மிகவும் எளிதான நடைமுறை

பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுப்பது மிகவும் எளிதான நடைமுறையே ஆகும். பயணிகள் முதலில் தங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து மெட்ரோ வெளியிட்டு இருக்கும் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன்பிறகு எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆப்ஷன் வரும். பயணிகள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை அதில் குறிப்பிட்டவுடன் கட்டணம் செலுத்துவதற்கான கேட்வேவிற்கு செல்லும்.

 எப்படி டிக்கெட் எடுப்பது?

எப்படி டிக்கெட் எடுப்பது?

அதில் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் வேலட்கள், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும். உடனடியாக டிக்கெட் வந்துவிடும். டிக்கெட்டை எந்த தாமதமும் இன்றி உடனடியாக வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக்கொள்ளாலாம். இந்த டிக்கெட்டை ரயிலில் ஏறுவதற்கு செல்வதற்கு முன்பாக இருக்கும் நுழைவுப் பகுதியில் காண்பித்துவிட்டு பயணிகள் செல்ல முடியும். டிக்கெட் எடுப்பதற்கான இந்த வாட்ஸ் அப் எண் விரைவில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும். வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி பெங்களூரு மற்றும் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+