வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! சென்னை சாலைகளில் திணறிய வாகன ஓட்டிகள்! காலையில் குளுகுளு கிளைமேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாகச் சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் மழை அதிகமாகவே இருந்தது.

Chennai roads saw a Heavy mist in early morning amid northeast monsoon rain

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது சென்னைவாசிகள் அனைவருக்கும் நினைவில் இருக்கும். இப்போது மழை முடிந்துள்ள நிலையில், பனிப்பொழிவு தொடங்கி உள்ளது.

தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அதேபோல நேற்றிரவும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், காலை நேரத்திலும் அதே நிலை தொடர்ந்தது.

குறிப்பாக அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி, காமராஜர் சாலை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும் சரி புறநகர்ப் பகுதிகளிலும் சரி பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

இதனால் குளிரும் மிகவும் அதிகமாக இருப்பதாகச் சென்னைவாசிகள் கூறுகின்றனர். கடுமையான பனிப்பொழிவு காரணமாக மெரினாவில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.

அதேபோல முக்கிய சாலைகளிலும் கூட பனி மூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியே வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+