40 நாள்.. இந்தியாவின் 75 நகரை வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி.. மாமல்லபுரத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை: இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நாளை துவங்க உள்ளது. இதையொட்டி 40 நாளில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தது. இந்த ஜோதிக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை துவக்க விழா நடைபெற உள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது பெருமையான விஷயமாகும். இதனால் இந்த போட்டியை விமரிசையா நடத்த தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜோதி ஓட்டம்
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை குறித்து நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில் ஜோதி ஓட்டம் துவங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 19ல் டெல்லியில் துவங்கி வைத்தார். இதையடுத்து அந்த ஜோதி ஓட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நேற்று தமிழகம் வந்தது. நாடு முழுவதும் இந்த ஜோதியை ஏந்தி வீரர்கள் வலம் வந்தபோது உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

40 நாளில் 75 நகரங்களில் வலம்
குறிப்பாக தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜோதியை பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகளுடன் விழா போல் மக்கள் வரவேற்றனர். இந்நிலையில் 40 நாளில் இந்தியாவின் 75 நகரங்களில் வலம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தது. ஜோதியை தமிழக அமைச்சர்கள் மெய்யநாதன், தாமு அன்பரசன் ஆகியோர் பெற்று கொண்டனர்.
Recommended Video

உற்சாக வரவேற்பு
மாமல்லபுரம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஜோதியை வீரர்கள் கையில் ஏந்தி மாமல்லபுரம் கடற்கரையில் பெருமையாக வலம் வந்தனர். இந்த ஜோதி இன்று மாலை சென்னையில் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்பிறகு நாளை துவக்கவிழாவில் ஜோதி இடம்பெற உள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்பு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 10 வரை நடக்க உள்ளது. நாளை மாலை செஸ் ஒலிம்பியாட்டின் துவக்கவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி மறுநாள் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். பிரதமரின் தமிழக வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதோடு, 22 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications