முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர்.. தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது.. ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர் என்றும் தனிப்பட்ட முறையில் அவர் மீது மரியாதை வைத்திருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில செய்தி தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வருவது கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டது.

அதேபோல், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மரப்புப்படி தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றினார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி,தமிழக அரசின் உரைகளில் சில பத்திகளை வாசிக்காமல் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் விட்ட பத்திகளும் இடம் பெறும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதேபோல், தமிழக பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை இணைத்து, பாஜக அல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் மு.க ஸ்டாலின், இதேபோன்ற தீர்மானத்தை அந்தந்த மாநில சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக முதல்வருக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் பனிப்போர் நிலவி வரும் நிலையில், ஆங்கில செய்தி தாள் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். குறிப்பாக முதல்வர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் கூறுகையில், " முதல்வர் மு.க ஸ்டாலின் சிறந்த மனிதர்.. அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications