Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஞ்சையோடு சுசீலாவிடம் பேசிய முதல்வர்.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி உற்சாகம்! மு.மேத்தாவுக்கும் விருது.!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசின் சார்பில், கலைஞர் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது பி.சுசீலாவுடன் இணைந்து முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்தை பாடி மகிழ்ந்தார்.


செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது" வழங்கப்படுகிறது.

mk stalin p susheela mu metha

இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ஆம் நாளன்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு. திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர், திரைப்பட இயக்குநர் திரு.கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டிற்கான "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற திரு. ஆரூர்தாஸ் அவர்களுக்கு கடந்த 3.6.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

mk stalin p susheela mu metha

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், "தென்னிந்தியாவின் இசைக்குயில்" என்றும், "மெல்லிசை அரசி" என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி. பி.சுசீலா அவர்களுக்கும். தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும். 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவாக கவிஞர் திரு. மு. மேத்தா அவர்களுக்கும், பின்னணி பாடகி திருமதி.பி.சுசீலா அவர்களுக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

முன்னதாக வயது முதிர்வு காரணமாக பி.சுசீலா வீல்சேரில் வந்த நிலையில் அவரது உடல் நலன் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாஞ்சையோடு விசாரித்தார். மேலும் பி. சுசீலா தனது இனிமையான குரலில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட முதலமைச்சர் ஸ்டாலினும் அவருடன் இணைந்து பாடினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+