மத்திய - மாநில உறவுகள் பற்றி பேச கேரளா செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்...அனல் பறக்குமா

கேரளாவின் கண்ணூரில் நடந்துவரும் சி.பி.ஐ.எம் மாநாட்டில் நாளை நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று ‘மத்திய- மாநில உறவுகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற உள்ள மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். நாளை நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று 'மத்திய- மாநில உறவுகள்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை, கண்ணூரில் நடத்தப்படுகிறது. துரையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில கிளையின் 23 வது மாநில மாநாடு நடந்து முடிந்ததையொட்டி, கேரள மாநிலத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறது

கேரள மாநில மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஆளுநர்களை கொண்டு, பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து ஏதாவதொரு குடைச்சல் அளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில், மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில் மாநில சுயாட்சி மாநாட்டை நாளைய தினம் நடத்த கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை கேரள அரசின் சார்பில் அந்த மாநில அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரளா அமைச்சர் அழைப்பு

கேரளா அமைச்சர் அழைப்பு

இந்த வரிசையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்தில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் கடந்த 3ஆம் தேதி சந்தித்தார். அப்போது அவர், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். நாளை காலை கண்ணூர் செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின், நாளை இரவே சென்னை திரும்புகிறார்.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

முதல்வர் ஸ்டாலின் சுயசரிதையான உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழா, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும், பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூல் வெளியீட்டு விழா கிட்டதட்ட மாநில சுயாட்சி மாநாடு போல் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில். தற்போது கேரள மாநில அரசு மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

 விவசாயிகள் முதல்வருக்கு மனு

விவசாயிகள் முதல்வருக்கு மனு

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டை தமிழக முதல்வர் புறக்கணிக்க வேண்டும் என பெரியாறு - வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+