ஜேசிபியை வைத்து குழந்தைகளை மீட்க முடியாது.. அதி நவீன இயந்திரங்கள் தேவை.. கோபி நயினார்
குழந்தைகளை மீட்கநவீன இயந்திரங்கள் தேவை என கோபி நயினார் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க இதுவரை நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதில் தீவிர அக்கறை செலுத்த வேண்டும் என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
இதேபோல போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் சம்பவம்தான் அறம் என்ற படத்தின் கதையாகும். மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பாராட்டப்பட்ட படம்தான் அறம். அதன் இயக்குநர் கோபி நயினார்.
சுஜித் சம்பவம் குறித்து அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், இதுபோன்ற சம்பவங்களில் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்க தற்போது நம்மிடம் போதிய உபகரணம், இயந்திரங்கள் இல்லை. ஜேசிபி இயந்திரத்தை வைத்து பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவது சரியான வழி அல்ல.

அதி நவீன இயந்திரங்கள் தேவை
இதுபோன்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்க அதி நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவற்றை தீயணைப்புத் துறையினரிடமும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினரிடமும் கொடுக்க வேண்டும்.

மக்களுக்கும் பயன்பட வேண்டும்
ராக்கெட் மீது நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அதேசமயம், சாமானிய மக்களுக்கும் விஞ்ஞானம் பக்க பலமாக இருக்க வேண்டும், பயன்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கோபி நயினார்.

போராடும் படையினர்
கோபி நயினார் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. சுஜித்தை மீட்க கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக முயன்று வருகின்றனர் மீட்புப் படையினர். அதி நவீன இயந்திரம் கைவசம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். தனி நபர்கள் கண்டுபிடித்த சாதனங்களை வைத்துத்தான் முயற்சிகள் நடந்து வருகின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

துரித கண்டுபிடிப்பு அவசியம்
இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க ஐஐடி உள்ளிட்ட அனைத்து அறிவியல்ஆய்வு நிறுவனங்களும் கை கோர்த்து போர்க்கால அடிப்படையில் அதி நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்து தமிழகம் முழுவதும் அதை விநியோகிக்க வேண்டும் என்பதே மக்களின் சாதாரண எதிர்பார்ப்பு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications