100 நாளில் மக்கள் குறைகள் தீர்ப்பு.. மொத்தமாக உருவாகிறது "புதிய துறை".. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 100 நாட்களில் மக்கள் வைத்த கோரிக்கை மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் புதிய துறை ஒன்றை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் இன்று பதவியேற்றார். திமுக கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து ஸ்டாலின் இன்று முதல் கையெழுத்தாக எந்த திட்டத்திற்கு அனுமதி அளிப்பார் என்று கேள்விகள் எழுந்தது. ஸ்டாலின் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பார் என்று கேள்விகள் எழுந்தன.

அதிரடி
இந்த நிலையில் முதல் நாளிலேயே 5 முக்கியமான கோப்புகளை கையெழுத்து போட்டு ஸ்டாலின் அசத்தி உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நொடியே திமுக தலைவர் ஸ்டாலின் தனது அதிரடியை காட்ட தொடங்கி விட்டார். இதில் ஸ்டாலின் கையெழுத்திட்ட முக்கியமான உத்தரவு என்றால் அது 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் தொடர்பானதுதான்.

திட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தின் போது தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மக்களின் குறைகளை மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அதை ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவேன் என்று கூறினார். 100 நாட்களில் மக்களின் குறைகளை எல்லாம் நிறைவேற்றுவேன் என்று ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

துறை
இதையடுத்து லட்சக்கணக்கில் ஸ்டாலினிடமும், திமுக நிர்வாகிகளிடமும் மனுக்கள் குவிந்தன. மக்கள் பலர் தங்கள் குறைகளை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் தற்போது மக்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற புதிதாக தனி துறையே உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ்
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். இதற்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திட்டார். அடுத்த 100 நாட்களில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய துறையை ஸ்டாலின் உருவாக்கி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications