மு.க.தமிழரசு மாமியார் மரணம்.. அஞ்சலி செலுத்த இன்று கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இளைய மகனான மு.க. தமிழரசுவின் மாமியார் காலமான நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார்.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசு. இவர் சென்னையில் ஷோரூம்களையும், கூடவே திருமண மண்டபங்களையும் நடத்தி வருகிறார்.

கருணாநிதியின் வாரிசாக இருந்தாலும் கூட முதல்வர் ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரை போல இல்லாமல் அரசியலைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பவர் மு.க.தமிழரசு. மு.க.தமிழரசு - மோகனா தம்பதியின் மகன் தான் பிரபல திரைப்பட நடிகர் அருள்நிதி.
இந்நிலையில், மு.க.தமிழரசு மாமியார் ஜெயலட்சுமி (80) நுரையீரல் பிரச்சினை மூச்சுத்திணறலால் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை காலமானார்.
மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி கோவையில் காலமான நிலையில், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார்.
இதற்காக இன்று (டிச.21) காலை 10 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் ஸ்டாலின், இன்று மாலையே சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications