வேற லெவல் ஆக்‌ஷன்! சைபர் கிரைம் கட்டுப்பாட்டு மையம் இனி செம ஃபாஸ்ட் தான்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைபர் கிரைம் பிரிவு தலைமையகத்தில் உள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறையை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், போலி இணையதளங்கள், மோசடி அழைப்புகள் மூலம், ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தைத் திருடும் சைபர் குற்றங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம்.

CM Stalin ordered expansion of 1930 help line and control room of cyber crime unit

சைபர் கிரைம் போலீசார், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பணத்தை இழந்த பலருக்கும் இதுவரை பணத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் பிரிவில் அளிக்கப்படும் புகார்கள் பலவற்றில் பணம் மீட்டுத் தரப்பட்டுள்ளது. வேலை தருவதாக கூறி பணம் மோசடி, அதிக பணம் தருவதாக ஆசை காட்டி நடைபெறும் சைபர் மோசடிகளைத் தவிர்க்க, செல்போன் யூசர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கெனவே உள்ள அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் உள்ள 8 இருக்கைகள் இருக்கைகளாகவும், புதியதாக கூடுதல் 15 பணியாளர்களை ஒப்பளிப்பு செய்யவும் முதற்கட்டமாக இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வரால் 2023-24ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட 9.28 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக இந்த ஆண்டு 3.10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+