ஸ்டாலின் எடுத்த லிஸ்ட்.. அதில் இருந்த 5 பெயர்கள்.. ஒருவருக்கு அடிக்கும் ஜாக்பாட்! எல்லாமே மாற போகுதே
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான லிஸ்ட் ஒன்றை தயார் செய்துள்ளதாகவும், அதில் 5 முக்கியமான அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

ஓய்வு எப்போது
தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப போகும் அந்த அதிகாரி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இறையன்பு பெரும்பாலும் தலைமை தகவல் ஆணையர் பொறுப்பிற்கு தேர்வு செய்யப்படலாம். அதாவது ஓய்வு பெட்ரா பின் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு இந்த பொறுப்பு அளிக்கப்படவில்லை என்றாலும் வேறு ஏதாவது முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு புதிதாக தலைமைச் செயலாளர் பதவியில் ஒருவரை நியமிக்க வேண்டுமானால், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலிருந்து ஒருவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ய வேண்டும்.

ஐஏஎஸ்
அந்த வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது 5 பேர் கொண்ட லிஸ்டை எடுத்து இருக்கிறாராம்.
நபர் 1 - கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார்.
நபர் 2 - 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.

லிஸ்ட் என்ன?
நபர் 3 - அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.
நபர் 4- ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.

கிருஷ்ணன்
கடைசியாக நபர் 5 - இந்த லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இணைந்து உள்ளார். இவர் 1992 தமிழ்நாடு பேச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.

ஜாக்பாட்
இந்த 5 பேரில் ஒருவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் டிக் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போக 1989 ஆம் வருட பேஜ்ஜில் கிருஷ்ணன், ராஜாராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதின், சிவ்தாஸ் மீனா, அனிதாபிரவீன், ஆகிய 7 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ராஜாராமன், அனிதா ப்ரவீன் ஆகிய இரு அதிகாரிகளும் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள். மற்ற 5 பேரும் மாநில அரசு பணியில் இருக்கிறார்கள். அதேபோல, 1990 ஆம் வருட பேஜ்ஜில் விபுநாயர், பனீந்திர ரெட்டி, சாய்க்குமார், ஜவஹர் என 4 பேர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கின்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 33 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை தலைமைச் செயலாளராக தேர்வு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. ஆனால், பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் முதல் பேஜ்ஜில் எத்தனை எத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களோ அவர்களில் முதல்வரின் நம்பிக்கைக்கும் ஆட்சியை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றலும் மிக்க ஒருவரைத்தான் தேர்வு செய்யபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications