சென்னையை உலுக்கிய சம்பவம்.. போதை பயணியால் பறிபோன கண்டக்டர் உயிர்! ஓடும் பஸ்சுக்குள் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே சென்று கொண்டுருந்த மாநகர பஸ்சில் பயணி ஒருவர் மதுபோதையில் தகராறு செய்ததால், அந்த பயணிக்கும் கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பயணி தள்ளிவிட்டதில் கண்டக்டர் கீழே விழுந்து உயிரிழந்தார். பயணிக்கும் கண்டக்டருக்கும் எப்படி பிரச்சனை ஏற்பட்டது? என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.

சென்னை மாநகர பேருந்தில் பயணிக்கும் - நடத்துநனருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த மோதலில் பஸ்சில் இருந்து கிழே விழுந்த பஸ் கண்டகர் ஜெகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னையில் இன்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

commuter-beat-an-mtc-bus-conductor-to-death-following-a-quarrel-in-chennai

சென்னை எம்.கே.பி நகரில் இருந்து கோயம்பேட்டிற்கு மாநகர டவுன்ஸ் பஸ் வந்துள்ளது. பேருந்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. இந்த பேருந்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் தனது குடும்பத்தினருடன் பயணித்துள்ளார்.

சென்னையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் வந்த கோவிந்தன், மீண்டும் வேலூர் செல்வதற்காக கோயம்பேட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். பேருந்து அண்ணா ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்த போது, அடுத்த ஸ்டேஜ் நெருங்கியதால், டிக்கெட் எடுப்பதற்காக பஸ்சை ஒரமாக நிறுத்த சொல்லியிருக்கிறார் கண்டக்டர் ஜெகன்குமார்.

அப்போது டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டருக்கும் பயணி கோவிந்தனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலைப்பாக மாறியிருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் பயங்கரமாக அடித்துக் கொண்டனர். பேருந்துக்குள்ளேயே இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. பேருந்தை விட்டு இறங்கி ரோட்டில் நின்றும் சண்டை போட்டுள்ளனர்.

இதில் கோவிந்தன் பிடித்து தள்ளியதில் நடத்துநர் ஜெகன்குமார் கீழே விழுந்த்தாக சொல்லப்படுகிறது. கீழே விழுந்தததில் படுகாயம் அடைந்த ஜெகன குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்த தகவல் அறிந்த அமைந்தகரை போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்தார். உயிரிழந்த அரசுபஸ் கண்டக்டர் ஜெகன் குமாருக்கு வயது 52 ஆகும். இவருக்கு 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். காயம் அடைந்த பயணி கோவிந்தனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பயணியுடன் சண்டை போட்டதில் கீழே விழுந்து காயம் அடைந்த கண்டக்டர் உயிரிழந்த தகவல் மாநகர பேருந்து கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் இடையே காட்டுத்தீ போல பரவியது.

இதனால், பல்வேறு இடங்களிலும் பேருந்துகளை தொடர்ந்து இயக்காமல் ஆங்காங்கே நிறுத்தினர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பேருந்துகளை இயக்க பஸ் ஊழியர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சென்னையில் போக்குவரத்து பாதிப்பு இன்றி வழக்கம் போல ஓடின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+