சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.. கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை..!
சென்னை: கொரோனாவை உறுதி செய்வதற்கான சோதனைகளில், முக்கிய பங்கு வகிக்கும் சி.டி.ஸ்கேனுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ரூ.3,500-க்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனுக்கு இப்போது ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இதனால் நோயை கண்டறிவதற்கே ஏழை எளிய மக்கள் பல ஆயிரங்களை செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.டி.பிசிஆர் பரிசோதனைக்கு ரூ.1,200 தான் கட்டணம் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது போல் சி.டி.ஸ்கேன்களுக்கும் அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோவிட் நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக கண்டறிவதற்காக நுரையீரல் சி.டி.ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆர்.டி.பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தும் கொரோனா அறிகுறி இருந்தால் அந்த நபர்களுக்கு சிடி ஸ்கேன் பரிந்துரை செய்யப்படுகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்கேன் நிலையங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே கொரோனாவை கண்டறிய ஆர்.டி.பிசிஆர் சோதனையே சிறந்த வழிமுறை என்றும் சிடி ஸ்கேன் மூலம் நோயின் தீவிரம் எந்தளவு இருக்கிறது என்பதை வேண்டுமானால் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே சி.டி.ஸ்கேன் கட்டணம் விவகாரத்தில் அரசு தலையிட்டு ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்காத வகையில் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications