சென்னையில் கொரோனா தீவிரம்.. ஒரே நாளில் 27 பேர் பலி.. மொத்த பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.. ஷாக்
சென்னை: சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட பெரு நகரங்களில் சென்னை முக்கியமான இடத்தில் உள்ளது. சென்னையில் கடந்த மார்ச் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் ஏப்ரல் இறுதியில் கோயம்பேடு கிளஸ்டர் காரணமாக கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது.
தினமும் 100+ கேஸ்கள் வந்த நிலையில் போக போக தினசரி கேஸ்கள் 3000ஐ தொட்டது. நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் சென்னையில் தினசரி கேஸ்கள் உயர்ந்தது.

இப்போது குறைந்துள்ளது
ஆனால் சென்னையில் தற்போது கொஞ்சம் கொரோனா கேஸ்கள் கட்டுப்பட தொடங்கி உள்ளது . தினசரி கேஸ்கள் 3000த்தில் இருந்து குறைந்து ஆயிரமாக மாறியுள்ளது. சென்னையில் தற்போது தினசரி கேஸ்கள் 1000-1100க்கு இடையே தினமும் வருகிறது. மொத்தமாக கேஸ்கள் குறையவில்லை. ஆனாலும் கடுமையான கட்டுப்பாடு காரணமாக கொரோனா கேஸ்கள் கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

மொத்த பாதிப்பு
சென்னையில் இன்று மட்டும் 1074 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 100877 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மொத்தமாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது.

எத்தனை நோயாளிகள்
சென்னையில் இன்று அதிகமாக 27 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் தற்போது வரை 86301 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தமாக 2541 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

வேறு நகரங்கள்
சென்னையுடன் ஒப்பிடும் போது மற்ற பெருநகரங்களிலும் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது.
- மும்பை -114268 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
- பெங்களூர் - 55544 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஹைதராபாத் - 60000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications