விழித்திரு: விலகி இரு: வீட்டில் இரு.. கொரோனாவிற்கு எதிராக முதல்வர் திட்டம்.. ரூ.3,780 கோடி ஒதுக்கீடு
சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிதி என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மொத்தம் 23 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை ஒருவர் கொரோனாவால் பலியாகி உள்ளார். மதுரையை சேர்ந்த நபர் கொரோனாவால் இன்று காலை பலியானார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். கொரோனாவிற்கு எதிராக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் காட்டுத்தீ போல பரவுகிறது
முதல்வர் பழனிச்சாமி தனது உரையில், கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது.மதம், ஜாதி, பொருளாதாரம் கடந்த மக்கள் ஒன்று கூட வேண்டும்.மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம். கொரோனாவை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது.

முதல்வரின் அன்பு வேண்டுகோள
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதால் குடும்பம், சமுதாயம், நாட்டை காப்பாற்றலாம். நான் தமிழக முதலமைச்சராக இல்லாமல் உங்களில் ஒருவனாக, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக விடுக்கும் அன்பு வேண்டுகோள. ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பதற்கான அரசின் உத்தரவு என்பதை உணருங்கள்.

முதல்வரின் திட்டம் என்ன
கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு... விலகி இரு... வீட்டில் இரு.. என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும். பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம். இதில் மக்கள் எல்லோரும் சேர்ந்து செயல்பட்டால் மட்டும்தான் வெற்றிபெற முடியும். இந்த கொரோனவை நாட்டில் இருந்து வெளியே அனுப்பாமல் நாம் ஓய கூடாது, மருத்துவர்களின் உதவியின்றி சுய மருத்துவம் செய்ய வேண்டாம்.

மருத்துவ நிதி ஒதுக்கீடு
தமிழக மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் வைரசுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மொத்த அதிமுக அரசும் தீவிரமாக வைரசுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,780 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முதல்கட்ட நிதி என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications