Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலைமை கைமீறி போகிறது.. இதை உன்னிப்பாக கவனியுங்க.. தமிழக அரசுக்கு அலர்ட் கொடுக்கும் டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு வெறும் 700 ஆக இருந்தது.
இதன்பின்னர் தமிழகத்துக்குள்ளும் ஓமிக்ரான் புகுந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறி விட்டது. தினமும் தொற்று இரட்டிப்பாகி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னையின் நிலைதான் மிகவும் மோசமாக உள்ளது.

சென்னையின் நிலைமை பரிதாபம்

சென்னையின் நிலைமை பரிதாபம்

அதாவது தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 10,000 என்றால் இதில் சென்னையின் பங்கு மட்டுமே 5,000 மொத்த பாதிப்பில் சுமார் 50% சென்னையில்தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

கூடுதல் கட்டுப்பாடுகள் வரும்?

கூடுதல் கட்டுப்பாடுகள் வரும்?

இதனால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ள நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் வரும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக கொரோனா அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 டிடிவி தினகரன் அலர்ட்

டிடிவி தினகரன் அலர்ட்

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பு அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், தலைநகரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

 கவனமாகக் கையாள வேண்டும்

கவனமாகக் கையாள வேண்டும்

அடுத்து பொங்கல் பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்ப் பரவல் தமிழகம் முழுவதும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரசு இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதற்கு வார்டு வாரியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள் தமிழக அரசு உடனடியாகச் செயல்பட வேண்டியது அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+