லேசாக தலைதூக்கும் கொரோனா.. வேகத்துக்கான அறிகுறி.. அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.. சென்னைவாசிகளே கவனம்!
சென்னை: சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிட்டிவ் ரேட் 0.5% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களும் 1569 ஆக அதிகரித்து அதிர்ச்சியை கொடுக்கிறது.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இதற்கு முக்கிய காரணமாகும்.
ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு 2,000-க்குள் அடங்கியது. இதன் காரணமாக ஏரளாமான தளர்வுகளை அள்ளி தெளித்தது தமிழ்நாடு அரசு.

எங்கும் கூட்டம்
ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகள் திறப்பட்டன.கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த தளர்வுகளை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை. மீன் மார்க்கெட், காய்கனி மார்க்கெட் எங்கிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. பெரும்பாலான பஸ்களில் நூறு சதவீத கூட்டம் இருக்கிறது.

கொரோனா வேகம்
இதன் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் கொரோனா ஏறுமுமாக இருக்கிறது. கடந்த 2 நாட்களில் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,859 பாதிப்புகள் இருந்த நிலையில் நேற்று 1,947 பாதிப்புகள் என்று மீண்டும் 2,000-ஐ கடக்க தயாராக இருக்கிறது கொரோனா. சென்னை, கோவை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது.

சென்னையில் அதிகரிப்பு
சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 185 என்ற அளவில் இருந்த நிலையில் நேற்று 215 ஆக அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது. இது சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க போகும் ஆரம்ப நிலைகளை காட்டுகிறது. கடந்த நாட்களாகவே தலைநகரில் பாதிப்பு வேகமெடுத்துள்ளது.

பாஸிட்டிவ் ரேட்
சென்னையில் கொரோனா நேர்மறை விகிதம்(பாஸிட்டிவ் ரேட் 0.5% முதல் 0.7% வரை அதிகரித்துள்ளது என்று சென்னைவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். சென்னையில் இப்போது தினமும் 27,286 பேருக்கு சோதனை செய்யப்படுகிறது. ஆக்டிவ் கேஸ்களும் 1569 ஆக அதிகரித்து அதிர்ச்சியை கொடுக்கிறது என்று விஜய் ஆனந்த் கூறுகிறார்.

மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாட்டில் கொரோனா முன்னேற்றம் அடைந்து வருவதால் ஊரடங்கை மேலும் 10 நாட்களுக்கு நீடித்துள்ள தமிழ்நாடு அரசு, கூடுதல் தளர்வுகள் ஏதும் வழங்கவில்லை. சென்னையிலும் பாராட்டும்படியாக மாநகராட்சி முன்கூட்டியே விழித்துக் கொண்டுள்ளது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள் செயல்பட தடை விதித்துளளது;.

முதல்வர் வேண்டுகோள்
கொரோனா எழுச்சியை தடுக்க வேண்டுமானால் மக்கள் தாங்களே சுய கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும். மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்க பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் கூட்டம் கூடும் இடங்களை மூட மாவட்ட கலெக்டர்கள், போலீசார் ஆகியோரே முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications