தமிழ்நாட்டில் இன்று உச்சம் தொட்ட கொரோனா 3509 பேர் பாதிப்பு - 2236 பேர் மீண்டனர் - 45 பேர் மரணம்
தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 45 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தினம் தினம் புதுப்புது உச்சங்களை எட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் 3481, 60வயதிற்கு மேற்பட்டவர்கள் 8423 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. 13 வயது முதல் 60 வயதிற்குள் மொத்தம் 59073பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 22245 பேர் பெண்கள், 36808 பேர் ஆண்கள் ஆவர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த 45 பேர் இன்று மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரேனா வைரஸ் பாதிக்கப்பட்ட 70977 பேரில் இதுவரை சிகிச்சை பெற்று 39999 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் 1834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளளது.
மருத்துவஊழியர்களிடம் வேகமாக பரவும் கொரோனா.. ஸ்டான்லி மருத்துவமனையில் 13 பயிற்சி டாக்டர்கள் பாதிப்பு
கொரோனாவிற்கு இன்று 45 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும் 29 பேர் அரசு மருத்துவமனையிலும் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 911ஆக உயர்ந்துள்ளது.