“லிஸ்டு” போட்ட ஆளுநர் ரவி.. பறக்கும் வாழ்த்துகள்! அரசியலா? - சு.வெங்கடேசனுக்கு வந்த “டவுட்டு”
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையில் அவரது செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் சந்தேகம் கிளப்பி இருக்கிறார். பிரமுகர்களின் பட்டியலை எடுத்து தனது வாழ்த்துகளை நேரில் தருமாறு ஆளுநர் அனுப்பி வைப்பது நிர்வாக செயல்பாடா? அரசியல் செயல்பாடா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
மத்திய அரசு அதிகாரியாக பணிபுரிந்துவிட்டு நாகாலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி பணிபுரிந்த காலத்திலேயே அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இருந்தன. நாகா அமைப்புகள் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தன.

அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல்
இந்த நிலையில் தமிழ்நாடு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி - தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் போக்குகள் நிலவி வந்தன. பல விசயங்களில் கருத்து வேறுபாடுகளும் உள்ளன. 7 தமிழர் விடுதலை மசோதா, நீட் எதிர்ப்பு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை என தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை அவர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள்
ஆனால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் மற்ற மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத சூழல் இதுவரை நிலவி வருகிறது. இது அல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜகவினர் அடிக்கடி சந்திப்பது, சனாதனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது என பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.

பல்கலைக்கழக வேந்தர்
அத்துடன் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்என் ரவி துணை வேந்தர்கள் நியமனம், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்பாக எடுக்கும் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக ஆளுநரை வேந்தராக நியமிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.

தேநீர் விருந்து புறக்கணிப்பு
தொடர் மோதல் போக்கின் காரணமாக ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தையே புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியானது. சமீபத்தில் பலரும் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டனர். மறுபக்கம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

சு.வெங்கடேசன் ட்வீட்
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவியின் செயல்பாடு தொடர்பாக சந்தேகம் எழுப்பி ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன். அதில், "மாவட்டந்தோறும் முக்கிய பிரமுகர்களின் பட்டியலை எடுத்து தனது வாழ்த்துகளை நேரில் தருமாறு அனுப்பி வைக்கிறார் தமிழக ஆளுநர். அவரது ஆர்வம், நிர்வாக செயல்பாடா? அரசியல் செயல்பாடா?" என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications