சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி!
சென்னை: சிவி சண்முகமும், நாங்களும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கருத்து வேறுபாடு மட்டும்தான் என்று கூறிய எஸ்பி வேலுமணி, தோல்வியை ஆராய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி பரிசீலனை செய்வதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவில் இருந்த 25 எம்எல்ஏ எஸ்பி வேலுமணி தலைமையில் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலமாக அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு கடிதம் அளித்தது.
தவெக மீதும் குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக எஸ்பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இடையில் மோதல் நிலவி வந்தது.
இதனிடையே அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். அதேபோல் விஜய் தலைமையில் அமைச்சரவையும் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டது. இதனால் எஸ்பி வேலுமணி தரப்பு அதிர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கினர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சுமூக பேச்சுவார்த்தை தொடங்கியது.
இன்று எஸ்பி வேலுமணி, அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ், லீமா ரோஸ் உள்ளிட்ட அனைவரும் எடப்பாடி பழனிசாமியை அவரின் வீட்டில் சந்தித்து சமூக உடன்பாட்டை எட்டினர். ஆனால் சிவி சண்முகம் மட்டும் வரவில்லை. தொடர்ந்து சபாநாயகர் முன் சென்ற அதிமுகவினர் ஒருங்கிணைந்து அதிமுகவின் கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்க கடிதம் அளித்தனர்.
இதன்பின் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனுக்களை திரும்ப பெற்றுள்ளோம். அதிமுகவில் பிளவு ஏற்படவில்லை. கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது. அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. அதிமுகவில் நீடித்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கிவிட்டன.
எங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவி சண்முகத்தின் அலுவலகத்தில் இருந்துதான் நாங்கள் வந்தோம். எல்லோரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். எந்தப் பிரச்சனையும் இல்லை. அதிமுக ஒன்றுகூடிவிட்டது. சிவி சண்முகம் எங்களோடு தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications