தங்க மனம் வாழ்க...கொரோனா நிதி கொடுத்த காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்
இரவு நேர காவலாளி ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார். அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
சென்னை: தங்க மனம் வாழ்க என்று அட்சய திருதியை நாளான இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் ஒருவரை நேரில் அழைத்து பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். முதல்வரே பாராட்டிய அவரது பெயர் தங்கதுரை. இரவு நேரங்களில் கண் விழித்து காவல் காத்து பெற்ற சம்பளம் பத்தாயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார் அதற்காகவே முதல்வரிடம் பாராட்டும் பரிசும் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்கள் அளிக்கும் பணம் கொரனோ தடுப்பு நடவடிக்கைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.
முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க தனியார் தொழில் நிறுவனங்களும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர்.

தங்கதுரை
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனியார் நிறுவனத்தில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வரும் தங்கதுரை என்பவர் ஒரு மாத சம்பளம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதி
சென்னை சாலிகிராமத்தில் பணியாற்றி வரும் தங்கதுரைக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ள கரைகண்டம் கிராமம். சென்னையில் தங்கி பணியாற்றி வரும் அவர், முதல்வரை சந்தித்து தனது சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்துள்ளார். ஆனால், முதல்வரை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருக்குறள் புத்தகம் பரிசு
இதையடுத்து தனது பணத்தை அரசு கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளார். இதையறிந்த முதல்வர் மு.க ஸ்டாலின், காவலாளி தங்கதுரையை நேரில் அழைத்து தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனது அலுவலகத்தில் வைத்திருந்த திருக்குறல் புத்தகம் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அவரை பாராட்டி தனது ட்விட்டர், முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் பாராட்டு
திரு. தங்கதுரை இரவெல்லாம் காவல் பணியில் ஈடுபட்டு பெற்ற ஊதியத்தை என்னிடம் வழங்க முடியாமல் #Donate2TNCMPRF கணக்கில் செலுத்திவிட்டு திரும்பியதை அறிந்து நெகிழ்ந்தேன். அவரை நேரில் அழைத்து, தலைவர் கலைஞர் உரையில் மனிதம் போற்றும் திருக்குறள் நூலை வழங்கி நன்றி கூறினேன்! தங்கமனம் வாழ்க! என்று பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தங்கதுரையின் செயலுக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications