நீதிபதி லோயா மர்ம மரணம்... நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம்... ஜனநாயகத் துரோகம்- சீமான் சாடல்
சென்னை: நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் ஜனநாயக துரோகத்தை மத்திய பாஜக அரசு செய்து வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.
டெல்லி வன்முறை வழக்குகளை விசாரித்து பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர். தமிழரான நீதிபதி முரளிதர் இந்த உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களிலேயே பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாகவும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:
டெல்லியில் நடந்த அறவழிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் ஆட்சியாளர்களின் மதத்துவேசப் பேச்சையும் கண்டித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் அவர்கள் ஒரே இரவில் வேறு மாநிலத்திற்குப் பந்தாடப்படுவது இந்தியாவின் உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நீதித்துறையின் மீது கல்லெறியும் கொடுஞ்செயலாகும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தன்னாட்சி அமைப்புகளின் தன்னுரிமையைப் பறித்து பாசிசம் தலைவிரித்தாடும் தற்காலச் சூழலில் சனநாயகத்தைக் காப்பாற்ற சட்டமன்றம், பாராளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் மேலாதிக்க அமைப்பாக மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இருப்பது வன்மையாக கண்டனத்துக்குரியது.
ஏன்டா சங்கீஷ் எங்கல விட எங்க அண்ணன் கீச்சிக்கு முதல்ல நீங்க தான் கருத்து மயிரு சொல்றேங்க..சீமான் அண்ணன் கீச்சிக்கு நோட்டிபிக்கேசன் ஆன்லயே வச்சிருப்பேங்களோ..கதரி சாவுங்கடா சங்கிஸ்
— சந்தனத்தமிழன் மகேஷ் (@MaheshSandal) February 28, 2020
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஹே. தஹில் ரமானி அரசியல் இடையூறு காரணமாகப் பதவி விலகுவதும், மத்திய புலனாய்வுத் துறையின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்து போவதும், தற்போது உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே இரவில் இடமாற்றம் செய்யப்படுவதுமான செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் ஜனநாயகத் துரோகம்.
இவ்வாறு சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications