2வது அலையில் அத்தனை பிரச்சினைக்கும் "டெல்டாதான்" காரணம்.. 40 சதவீதம் அதிகம் பரவும்.. சர்வே ரிசல்ட்
சென்னை: இந்தியாவில் இரண்டாவது அலைக்கு பெரிதும் காரணமாக இருந்த டெல்டா வகை வைரஸ் அதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகையை விட 40 சதவீதம் அதிகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்டா உருமாற்றம் இல்லாத கொரோனா வைரஸ் தாக்கியவர்களை ஒப்பிட்டால், டெல்டா வைரஸ், நோயெதிர்ப்பு பாதுகாப்பை 55 சதவீதம் வரை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து மற்றும் நாட்டின் மருத்துவமனைகளில் இருந்து ஒரு விஞ்ஞான நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், முதலில் பரவிய வைரசுடன் ஒப்பிடும்போது டெல்டா வகை வைரஸ்கள், தடுப்பூசி மூலம் உருவான ஆன்டிபாடிகளுக்கு ஏறக்குறைய எட்டு மடங்கு குறைவான தடுப்பாற்றலை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பாவுடன் ஒப்பிடும்போது டெல்டா வேரியன்ட் குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு ஏமாற்று திறன் உள்ளது என்கிறார்கள். தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களில் கடுமையான நோய் / மரணத்தைத் தடுக்கும். ஆனால் தடுப்பூசி போட்டும் நோய் பாதிப்பு பரவலுக்கு உள்ளானவர்களுக்கு சிறப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம்.












Click it and Unblock the Notifications