இதுதான் ஜனநாயகம்.. இதுதான் தமிழ்நாடு.. அதிகாலையே வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சூப்பர் சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில் அதிகாலையே வாக்குச்சாவடி மையங்களில் வயதானவர்கள் பலரும் நேரடியாக வந்து வாக்களித்தனர். இளைஞர்கள் வரும் முன் முதல் ஆளாக வாக்குச்சாவடி மையங்களில் வயதானவர்கள் பலரும் வாக்களித்துள்ளனர்.
வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் இருந்தும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வயதானவர்கள் நேரில் வந்து வாக்களித்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களிடையே நிலவும் இந்த வாக்களிக்கும் ஆர்வம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்களிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வீட்டில் இருந்து தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதற்காக ஏற்கனவே 12டி பார்ம் வழங்கப்பட்டது. இந்த பார்ம் கடந்த மாதம் சென்னை மக்களிடையே வழங்கப்பட்டு அதில் விருப்பம் உள்ளவர்களின் பெயர்கள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் 4 ஆயிரத்து 175 முதியவர்கள் இதில் விண்ணப்பம் செய்தனர். அதேபோல் விண்ணப்பம் செய்த மாற்றுத்திறனாளிகள் 363 பேரும் இதில் தேர்ச்சி பெற்றனர். தபால் மூலம் வாக்களிக்க இவர்கள் தேர்வானார்கள்.
அசத்தல்: இந்த நிலையில்தான் சென்னையில் தபால் வாக்கெடுப்பு கடந்த 8ம் தேதி தொடங்கியது. கடந்த 13ம் தேதி வரை தபால் வாக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடந்தது . சென்னையில் மட்டும் இதற்காக 65 குழுக்கள் இவர்களின் வீடுகளுக்கு சென்றனர். முறையான பாதுகாப்புடன், இவர்களின் வாக்குகளை பெற்றனர். ஒரு குழுவிற்கு 4 பேர் என்று கிட்டத்தட்ட 250 பேர் வாக்குகளை பெற்றனர்.
மற்ற மாவட்டங்களில் இதேபோல் தபால் வாக்குகள் பெறப்பட்டது. வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் இருந்தும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று வயதானவர்கள் நேரில் வந்து வாக்களித்துள்ளனர்.
தேர்தல்: 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கி உள்ளது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலோடு எல்லா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும்.
மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு (39), அருணாச்சல பிரதேசம் (2 லோக்சபா தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஸ்கர் (1), மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகலா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தரப் பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1), ஜம்மு மற்றும் காஷ்மீர் (1), லட்சத்தீவு (1), புதுச்சேரி (1) என இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications