கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சந்தேகம் எழுப்பும் பா.ரஞ்சித்!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது மறைந்து கொண்டிருக்கும் உண்மை குற்றவாளிகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது தொடர்பான தமிழக அரசு வழக்கறிஞர் குழுவில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி செங்குன்றம் அருகே உள்ள பொத்தூரில் உள்ள அவரின் நினைவிடத்தில் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய கட்சி
அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு அமைக்கப்பட்ட 9 அடி சிலை திறக்கப்பட்டது. பின்னர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகம் செய்தார். இதன்பின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினர்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு
இதில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் நிறைய கேள்விகள் உள்ளது. இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பது தெரியவில்லை. விசாரணைக்குட்பட்டு சில குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள். ஆனால் பின்னால் இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது.
உண்மை குற்றவாளிகளா?
இதனால் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்ற உண்மைத்தன்மையை ஆராய வேண்டி இருக்கிறது. வழக்கு மன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் குழுவுடன் சேர்த்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர்கள் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. குற்றவாளிகளுக்கு பின் பெரிய சூழ்ச்சி இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
கோரிக்கை
அதனால் விசாரணையில் அனைத்து விவகாரங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பாக கூட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதுவெறும் முன்விரோத கொலையாக இருக்க வாய்ப்புகள் இல்லை. இந்த சம்பவத்திற்கு பின்னுள்ள உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அம்பை எய்தது யார்?
மறைமுகமாக இருக்கும் குற்றவாளிகளை வெளியில் கொண்டு வர வேண்டும். அதனை பொற்கொடி நிச்சயம் வெளியில் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அம்பேத்கரின் சட்டப்பாதையில் பயணித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீண்டும் விவாதமாகி இருக்கிறது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications