மனதை பக்குவப்படுத்த! படிக்க சிந்திக்க! சிறைவாசிகளுக்கு புத்தகங்களை பரிசளித்த கனிமொழி!
சென்னை: சிறைவாசிகள் படிக்கவும் சிந்திக்கவும் ஏற்ற வகையில் அவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பரிசாக வழங்கியிருக்கிறார் கனிமொழி எம்.பி.
சிறைவாசிகளின் மனதை பக்குவப்படுத்தி பகுத்தறிவை வளர்க்கும் வகையிலான தலைப்புகளை கொண்ட புத்தகங்களை தேர்ந்தெடுத்து கனிமொழி கொடுத்திருக்கிறார்.
புத்தகம் வாசிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவையும், மனதையும் செழுமைப்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சென்னை புத்தகக் காட்சி
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 46வது புத்தகக் காட்சிக்கு சென்றிருந்த கனிமொழி எம்.பி. புது தலைப்புகளில் வெளிவந்த புத்தகங்களை வாங்கியதோடு, தாம் ஏற்கனவே படித்து முடித்த நூற்றுக்கணக்கான புத்தகங்களை சிறைவாசிகள் படிப்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சென்னை புத்தக காட்சி திடலில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்வீர் என்ற பெயர் பலகையோடு தனி அரங்கு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு தலைப்புகளில்
கற்போம் பெரியாரியம், பெரியார் இன்றும் என்றும், கருணாநிதியின் எழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்களை சிறைவாசிகளுக்கு கொடுத்தார் கனிமொழி. அதேபோல் திருக்குறள் மற்றும் அதற்கான தெளிவுரை அடங்கிய புத்தகங்களையும் கனிமொழி கொடுத்தார். எங்கு ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று விவேகானந்தர் கூறியதற்கேற்ப புத்தகங்களின் மூலம் சிறைவாசிகளை திருத்துவதற்கான முயற்சிகளில் சிறைத்துறை ஈடுபட்டுள்ளது.

ரசீது ஒப்படைப்பு
கனிமொழியை போலவே இன்னும் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிறைவாசிகளுக்காக சிறைத்துறை அதிகாரிகளிடம் புத்தகங்களை கொடையாக கொடுத்தனர். 46வது சென்னை புத்தக காட்சியில் இதுவரை 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை சிறைத்துறை அதிகாரிகள் தானமாக பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் நன்கொடையாக பெற்றுக் கொள்ளும் புத்தகங்கள் அனைத்துக்கும் ரசீது ஒன்றும் வழங்குகிறார்கள் சிறைத்துறை அதிகாரிகள்.

பிரித்துக் கொடுக்கப்படும்
சென்னை புத்தககாட்சியில் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள சிறைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே புத்தக காட்சியில் நடிகர் ராஜேஷை எதேச்சையாக பார்த்த கனிமொழி அவரிடம் சில நிமிடங்கள் உரையாடி உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications