ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை.. பட்டுன்னு சொன்ன கார்த்தி சிதம்பரம்!
சென்னை: அதிமுகவில் ஒரு பிரிவினர் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவளித்திருக்கின்றனர். அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறி அவர்கள் நடந்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது பற்றி கூறிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சட்டமன்றத்தை பொறுத்தவரை எம்எல்ஏக்களை விட கொறடாவுக்கும், கட்சியின் தலைவருக்கும்தான் பவர் அதிகம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் எம்எல்ஏக்கள் ஃபாலோ செய்ய வேண்டும்.

ஆனால், அதிமுக விஷயத்தில் அப்படியே தலைகீழாக நடந்தது. நேற்று விஜய் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொண்டார். இதில் அதிமுக எதிராக வாக்களித்தது. தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் அப்படியே வாக்களிக்க கேட்டுக்கொண்டது. ஆனால், சி.வி.சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் கட்சியின் தலைமை உத்தரவையும், கொறடாவின் உத்தரவையும் மீறி விஜய்க்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதன் காரணமாக விஜய்க்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்தது.
இந்த விவகாரத்தில் அதிருப்தியடைந்த எடப்பாடி பழனிசாமி, 25 எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகருக்கு மனு கொடுத்திருக்கிறார்.
இந்த விவகாரம் இப்படி இருக்கையில், ஆட்சியில் அதிமுகவினரை சேர்க்க வேண்டிய அவசியம் விஜய்க்கு கிடையாது என்று கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை, விஜய் ஆதரவு அணியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனு அளிப்பார்கள். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும். அந்த அணி என்னவாக போகிறது என்று தெரியவில்லை. எனவே இவர்களை ஆட்சிக்குள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் இல்லாமலேயே ஆட்சி நடத்தும் வாய்ப்புகள் விஜய்க்கு இருக்கின்றன" என்று பேசியிருக்கிறார்.
ஒருவேளை அதிமுக உள்ளே வருவரை காங்கிரஸ் விரும்பவில்லையோ! அதன் வெளிபாடுதான் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications