உலகக்கோப்பை போனது நிம்மதி.. மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி! திமுக ராஜீவ் காந்தி தடாலடி
சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததன் மூலம் மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக திமுக ராஜீவ் காந்தி தெரிவித்து உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று இறுதிப்போட்டியுடன் முடிந்து உள்ளது. உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஆஸ்திரேலியா தேர்வு செய்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட், லபுஷேனின் அபார ஆட்டத்தால் 43வது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதித்து இருக்கிறது. உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். விராட் கோலி, ரோகித் ஷர்மா, முஹம்மது சிராஜ் என அனைத்து இந்திய வீரர்களும் கண்ணீர் வடித்து சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்திய அணியின் தோல்வி குறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “இந்திய வீரர்கள் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள் அதிலும் ரோகித்,கோலி, ஷமி என.. தன் தனித் திறமைகளால் மிளிர்ந்தனர் மிக திறமையான அணி இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்தது வருத்தமாக உள்ளது! ஆனால் ஒரு பக்கம் வேறு உணர்வும் வருகிறது!
உலக கோப்பையை இந்தியா வென்று இருந்தால் மோடியின் விளம்பர அரசியலால் உறுதியாக கோப்பை உத்திரபிரதேசம் ராமர் கோவிலுக்கு போயிருக்கும், பாஜகாவின் அரசியல் பிரச்சார மேடைக்கும் வந்து வெற்றிக்கு காரணம் மோடியும், மோடியின் சொந்த ஊரான அஹமதாபாத்தும் தான் என சொல்லி வீரர்களின் திறமை புறம்தள்ளபட்டு மோடியின் வித்தை புகழப்பட்டு இருக்கும்! மோடியின் விளம்பர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியாவின் ஹெட்க்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றும் தோனுகிறது. உலகக்கோப்பை போய்விட்டது என்று வருத்தப்படுவதை விட கோப்பையோடயாவது போனதே என நிம்மதி தான் கொள்ள முடிகிறது இந்த நேரத்தில்!!!” என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட்












Click it and Unblock the Notifications