Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வருக்கு துரைமுருகன் சிக்னல்! சபாநாயகரை பார்த்த ஸ்டாலின்! கோபமாக வெளியேறிய ஆளுநர்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படித்துக் கொண்டிருந்த போதே அவர் முழுமையாக உரையை படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் சிக்னல் கொடுத்தார். முதல்வரும் சபாநாயகரையே பார்த்தார். பிறகு சட்டசபை செயலாளரை அழைத்தார்.. அதன் பிறகுதான் கோபத்துடன் ஆளுநர் வெளியேறினார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் என்னதான் நடந்தது?

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் நேற்றைய தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டு முதல் காகிதம் இல்லா ஆளுநர் உரை என்பதால் அனைவருக்கும் ஆளுநர் உரையின் நகல் டேப்பில் கொடுக்கப்பட்டது. ஆளுநர் உரையை படிக்கத் தொடங்கியதும் சில இடங்களில் இருந்த தமிழ்நாடு என்ற வார்த்தையை படித்துவிட்டார்.

ஆனால் பல இடங்களில் தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக அதாவது Tamilnadu Government என்பதற்கு பதிலாக This Government என்றே வாசித்தார். பின்னர் 3 ஆவது பக்கத்தில் 3ஆவது பாயிண்டை படிக்கும் போதுதான் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

 3 ஆவது பாயிண்ட்

3 ஆவது பாயிண்ட்

அந்த 3ஆவது பாயிண்டில் வந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை திமுக கூட்டணி கட்சிகள் தெரிவிக்கின்றன. அந்த பத்தியில் கூறியிருப்பதாதவது: இந்த வளர்ச்சி பயணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நமது முதல்வர் அயராத உழைப்போடும் அக்கறையோடும் இந்த அரசை வழிநடத்தி வந்துள்ளார்கள். இந்த வகையில் அண்மையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநிலங்களின் நிலை என்ற ஆய்வு, சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களில் முதன்மை மாநிலம் தமிழ்நாடு என்று முடிவு செய்துள்ளது. இந்தச் சாதனை முதல்வரின் ஆற்றல்மிக்க தலைமைக்கும் சமூகநீதியையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்ட திராவிட மாடல் ஆட்சிக்கும் அளிக்கப்பட்டுள்ள நற்சான்றிதழாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

இந்த திராவிட மாடல் என்பதை வாசிக்காமல் ஆளுநர் விட்ட போதே அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினை பார்த்து என்ன எது என செய்கையில் கேட்டார். அதற்கு முதல்வரும் பொறுங்க என்பதை போல் தலையசைத்தார். ஆளுநர் தன் உரையை வாசித்து முடிக்க போகும் நிலையில் பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயரையும் சமூகநீதி, பெண்ணுரிமை, மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததை அடுத்து மீண்டும் முதல்வரை பார்த்து துரைமுருகன் தனது அதிருப்தியை சொன்னார். உடன் முதல்வர் ஸ்டாலின் ஆளுநரையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு சபாநாயகரையும் பார்த்தார்.

 முதல்வரின் பார்வை

முதல்வரின் பார்வை

முதல்வரின் பார்வையை புரிந்து கொண்ட சபாநாயகர் உடனே தனது அலுவலக ஊழியரை அழைத்து அவரிடம் எதையோ சொன்னார். இவை எல்லாம் ஆளுநர் உரை நடந்து கொண்டிருக்கும் போதே நடந்தது. ஆளுநர் உரையாற்றி முடித்தவுடன் சபாநாயகர் தமிழாக்கத்தை வாசிப்பதற்குள் முதல்வர் இருக்கைக்கு துரைமுருகன் சென்றார். அப்போது ஏதோ சில பேப்பர்களை இருவரும் மாற்றி கொண்டனர். இதையடுத்து ஆளுநருக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சட்டசபை செயலாளரை முதல்வர் அழைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கினார். ஆளுநர் உரை என்பதால் சபாநாயகருக்கும் ஆளுநருக்கும் மட்டுமே மைக் வழங்கப்பட்டிருந்தது.

 ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை

ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என முதல்வர் தெரிவித்தார். அப்போது முதல்வர் என்ன பேசுகிறார் என தெரியாமல் ஆளுநர் தனது செயலாளர், பாதுகாப்பு அதிகாரியை அழைத்து கேட்க, அதற்கு பாதுகாப்பு அதிகாரி எதையோ சொன்னார், அதை கேட்டதும் ஆளுநர் கோபத்துடன் மின்னல் வேகத்தில் அவையை விட்டு வெளியேறினார். தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், சபாநாயகரை பார்த்தும் துரைமுருகனை பார்த்தும் சிரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+