"திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள்".. ஆளுநர் ரவிகிட்ட திமுகவின் வம்பு.. பொறிந்து தள்ளிய டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி நீட்விவகாரத்தில் திமுகவை விமர்சித்துள்ளார்
சென்னை: தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம்.. அது முடிந்து போன விசயம்... ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கி போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஸ் இல்லாத வண்டியை போல ஜாம் ஆகும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: "தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு ரத்து குறித்த தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருக்கே திருப்பி அனுப்பி விடப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சமூகநீதிக் கொம்பர்கள், ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் திராவிட ஸ்டாக்கிஸ்ட்டுகள், 1-ஆம் தேதியே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஏன் வாய்திறக்கவில்லை? என்று தெரியவில்லை.

ஆளுநர் ரவி
இவர்களிடம் வெளிப்படைத் தன்மை உண்மையிலேயே இருந்திருக்குமேயானால், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட அந்த நீட் மசோதா குறித்து தமிழக மக்களுக்கு இவர்கள் தெரிவித்து இருக்க வேண்டும்.
இதில் கூட ஆளுநர் ஜனநாயக பூர்வமாக நடந்திருக்கிறார். அரசியல் காரணங்களுக்காக வெளியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி, அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஆகியவற்றை ஆளுநர் அவசர கோலத்தில் பரிசீலனை செய்ய இயலாது.

வீண் வம்பு
திமுக தொடர்ந்து இதில் வீண் வம்பு செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களுக்கும் ஆளுநரும் ஜனாதிபதியும் ஒப்புதல் அளிக்க வேண்டுமென இவர்கள் கருதக்கூடாது. அப்படி கருதுவார்களேயானால், 1974-ஆம் ஆண்டு இதே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவர்கள் ஆட்சியில் 'மாநில சுயாட்சி' குறித்து நிறைவேற்றிய தீர்மானத்தின் கதி என்ன? கடந்த 47 ஆண்டு காலத்தில் அதை நிறைவேற்றுவதற்கு இவர்கள் எடுத்த முயற்சி என்ன? என்பதை இவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும்.

தமிழக பாடத்திட்டம்
இனியாவது திமுக தன் இயலாமையை முழுமையாக ஒப்புக்கொண்டு தமிழகப் பாடத்திட்டத்திலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மாணவர்களையும் அதை எதிர்கொள்ள தயார் செய்திட வேண்டும்.
இவர்கள் போட்ட தூபத்தால் ஏற்கெனவே 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்ததாக இவர்களே சொல்கிறார்கள். அரசியல் லாபத்திற்காக எந்த பாவத்திற்கும் பழிக்கும் இவர்கள் அஞ்சியதில்லை தான்.

ஆளுநர் ரவி
ஆனால் நடைபெற வாய்ப்பு இல்லாத ஒன்றைத் திருப்பித் திருப்பி ஏழை, எளிய மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து தவறான நம்பிக்கையூட்டுவது மிகப்பெரிய குற்றம் ஆகும். தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பது இயலவே இயலாத காரியம். அது முடிந்து போன விசயம்... ஆளுநரோடு மோதல் போக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அது அரசு இயந்திரத்தை முற்றாக முடக்கி போடக் கூடும். அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர் என அனைவரது நடவடிக்கைகளும் கிரீஸ் இல்லாத வண்டியை போல ஜாம் ஆகும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications