திராவிட மாடலை "எதிர்ப்பவர்களின்" புத்தி இதுதான்! கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த காலப் பெருமிதங்களோடு நிகழ்காலச் செயல்பாடுகளை இணைத்தவர் கருணாநிதி. நிகழ்காலச் செயல்பாடுகளோடு எதிர்கால இலக்குகளைத் தீர்மானித்தவர் கருணாநிதி. இன்றைக்கு திராவிட மாடல் என்ற தத்துவத்தோடு ஒரு ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம் என்றால் அந்த திராவிடவியல் நிர்வாகக் கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி.

எதிர்ப்பவர்கள் யார்?: சமூக நீதி - சமத்துவம் - சகோதரத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று - மாநில சுயாட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உன்னதமான கோட்பாடு தான் திராவிடக் கோட்பாடு ஆகும். எல்லார்க்கும் எல்லாம் என்பதே அதனுடைய உள்ளடக்கம் ஆகும். எல்லார்க்கும் எல்லாம் வாய்த்துவிடக் கூடாது, போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் தான் திராவிட மாடலை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திராவிட மாடல்: படிப்பு மறுக்கப்பட்ட சமூகத்துக்கு படிப்பைக் கொடு! கல்லூரிக் கல்வியை அடையமுடியாதவர்க்கு கல்லூரிக்கல்வியைக் கொடு! ஏழை, எளிய விளம்பு நிலை மக்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுத்து! வர்ணம், சனாதனத்தின் பேரால் ஒதுக்கப்படுபவர்களுக்கு அந்த உரிமையைப் பெற்றுத்தா! ஆணுக்கு நிகர் பெண்! பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கு! பெருந்தொழில்கள் மட்டுமல்ல, சிறுதொழில்களும் வளர்த்தெடு! நகர்ப்புற பகுதிகள் மட்டுமல்ல கிராமப்புறங்களும் செழிக்க வேண்டும்!அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்.மாநிலத்தின் வளம் என்பது மாநிலத்து மக்களின் சிந்தனை வளர்ச்சியின் மூலமாகத் தெரிய வேண்டும்!- இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியாகும்.

நம்பிக்கை: இதுதான் தமிழ்நாடு என்ற மாநிலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக வளர்ப்படுத்தப் போகிறது. நாளையே இது நடந்து விடும் என்று சொல்லும் கற்பனாவாதியில்ல நான். ஆனால் திராவிட மாடலே அதனைச் செய்து காட்டும் என்ற நம்பிக்கை வாதி நான். காட்டும் என்ற தன்னம்பிக்கை வாதி நான்.இந்த தைரியத்தையும் தன்னம்பிக்கையும் என்னுள் விதைத்தவர் கருணாநிதி. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
திமுக-வா, ஆதவ் அர்ஜுனாவா? ஜனநாயகன் 'லீக் மாஸ்டர்' இவரா..வினோஜ் செல்வம் கிளப்பிய அந்த 1 பகீர் சந்தேகம் -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
அதிமுக, பாஜக கதை அவ்ளோ தான்.. கோவை தெற்கில் குடியேறும் செந்தில் பாலாஜி.. அதுவும் எங்க தெரியுமா?












Click it and Unblock the Notifications